மே 9ஆம் திகதி பேரா ஏரியில் மக்களைத் தள்ளிய குழுவைக் கண்டுபிடிக்க விசாரணை

Prathees
2 years ago
மே 9ஆம் திகதி பேரா ஏரியில் மக்களைத் தள்ளிய  குழுவைக் கண்டுபிடிக்க விசாரணை

கடந்த மே 9ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தின் போது பேரா ஏரியில் மக்களைத் தள்ளிய நபரை பொலிஸார் கைது செய்தனர்.

அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் பணத்தை கொள்ளையடித்து அவரை பேரா ஏரியில் தள்ளியதாக கூறப்படும் நபர் ஒருவர் வகந்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ அவர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான ஒருவராவார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போதுஇ ​​சந்தேக நபர் உள்ளிட்ட சிலர் அவரை தரையில் இறக்கிஇ பணப்பையை கொள்ளையடித்துஇ பின்னர் அவரை பேரா ஏரியில் தள்ளிவிட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மற்ற குழுவைக் கண்டுபிடிக்க இந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.