வசந்த முதலிகே தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு
Mayoorikka
2 years ago
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் மேலும் இருவரை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கான உத்தரவை பாதுகாப்பு அமைச்சர் பிறப்பித்துள்ளார்.
கடந்த வியாழன் அன்று கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியின் பின்னர், ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வசந்த முதலிகேவை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.