ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சீனஉளவுக் கப்பல் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகதகவல்
Kanimoli
2 years ago
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சீனஉளவுக் கப்பல் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5, இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் யுவான் வாங் 5, கடந்த 16 ஆம் திகதி பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கை துறைமுகத்திற்கு வந்திருந்தது.
அதேசமயம் யுவான் வாங் 5 கப்பல் , இலங்கைக்கு வருகை தந்தமை தமது நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என இந்தியா பெரும் அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.