இரண்டு கோடி காசோலை பற்றி கருத்து வெளியிட்டுள்ள சனத் நிஷாந்த

Prathees
3 years ago
இரண்டு கோடி காசோலை பற்றி கருத்து வெளியிட்டுள்ள சனத் நிஷாந்த

தனது வீடு மற்றும் காணியை அடமானம் வைத்து கடன் பெற்றமைக்கான காப்புறுதித் தொகையாக இரண்டு கோடியே இரண்டு இலட்சத்து 6இ250 ரூபாவை தனது பெயரில் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பாராளுமன்ற உறுப்பினரின் வீடும் சில குழுவினரால் தீயிட்டு அழிக்கப்பட்டது. வீடு இழந்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் பெயரில் எழுதப்பட்ட 2 கோடியே 2 இலட்சத்து 6,250 ரூபா பெறுமதியான காசோலை தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

குறித்த தொகையானது எரிக்கப்பட்ட தனது வீட்டிற்கு அரசாங்கம் வழங்கிய நட்டஈடு அல்ல என எம்.பி. கிடைத்துள்ள காசோலை அவர் வாங்கிய கடன் தொகை தொடர்பான காப்புறுதித் தொகையே என நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4