கரப்பான் பூச்சியுடன் கோழி பிரியாணி பாசலை வழங்கிய பிரபல உணவகம்!

Mayoorikka
2 years ago
கரப்பான் பூச்சியுடன் கோழி பிரியாணி பாசலை வழங்கிய பிரபல உணவகம்!

கரப்பான் பூச்சியுடன் கோழி பிரியாணி பாசலை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள பிரபல உணவம் ஒன்றின் உரிமையாளாரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (30) எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணயில் விடுவித்துள்ளார்.

குறித்த உணவகத்தில் மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும் வைத்தியர்கள் சம்பவதினமான நேற்று விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழி பிரியாணியை ஓடர் கொடுத்து வாங்கிச் சென்று அதனை உண்ணுவதற்காக திறந்தபோது ஒருவரின் பாசலில் கோழிப் பொரியல் இறைச்சியுடன் கரப்பான் பூச்சியும் பெரித்த நிலையில் இருந்துள்ளது.

இதனை அடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததை அடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன் உணவக முதலாளியை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்து விடுவித்தார்.

இதேவேளை, பொது சுகாதார அதிகாரிகள் நகர்பகுதியில் அமைந்துள்ள உணவகங்களை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு பாவனைக்கு உதவாத அரிசி மூடைகள் 25 கைப்பற்றியதுடன் சுகாதாரமில்லாத பல உணவகங்களுக்கு சட்டநடவடிக்கை எடுத்துள்ளனர் அதுமட்மன்றி கடந்த 2 வருடத்துக்கு மன்னர் உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் வைத்து இறைச்சி வெட்டிய சம்பவம் அண்மையில் வாழைச்சேனையில் மாட்டு இறைச்சி கடை உரிமையாளர் ஒருவர் வீட்டின் மலசல கூடத்தில் இறைச்சிக்காக மாடு வெட்டிய வசம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.