ஜெர்மனி வணிக விமானங்களில் முகக்கவச தேவை இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
கொரோனா தொற்று நோய்களின் போது அறிமுகப்படுத்தப்பட்ட வணிக விமானங்களில் முகக்கவச தேவைகளை ஜெர்மனி விரைவில் கைவிடும் என சுகாதார அமைச்சர் காரல் லாட்டர்பாக் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியின் முதன்மை விமான நிறுவனமான லூப் தான்சா இந்த விதியை இனி செயல்படுத்த முடியாது என புகார் அளித்ததை தொடர்ந்து அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருக்கின்றது.
அதற்கு பதிலாக ஜெர்மனியில் பொது போக்குவரத்தில் மக்கள் முக கவசங்களை அணிவதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள் எனவும் கூட்டணி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்ட பின்னர் பெர்லினில் lauterbach தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வரும் இலையுதிர் காலத்தில் நோய் தொற்று அதிகரிப்பதற்கு ஜெர்மனி நன்கு தயாராக இருப்பதாகவும் தொற்று நோய்கள் அதிகரித்தால் முக கவசம் அணியும் விதிகள் சில உட்புற அல்லது வெளிப்புற இடங்களில் திரும்ப கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அப்படி ஒரு சூழலில் விருந்தினர்களின் எண்ணிக்கை மீண்டும் வரம்பிடுமாறு உணவக உதவியாளர் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.