ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைந்ததற்காக நடிகை தமிதா கைது

Prathees
2 years ago
ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைந்ததற்காக நடிகை தமிதா கைது

போராட்டத்தில் பலமாக செயற்பட்ட நடிகை தமிதா அபேரத்ன நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டதாக கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி  அலுவலகத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததுதான் இந்தக் குற்றச்சாட்டு.

பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போதே அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

 கறுப்பு மணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து செயற்பாட்டாளர்களும் நேற்று தியத உயன வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதையடுத்துஇ பொலிஸ் குழுவொன்று அங்கு புகுந்து அவர்களை கைது செய்தது. 

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ‘கறுப்பு மணி’ போராட்டம் நடத்தப்பட்டது.