நாளாந்த மின்வெட்டு 8 மணிநேரமாக அதிகரிக்கலாம்: அமைச்சர் எச்சரிக்கை

Prathees
2 years ago
நாளாந்த மின்வெட்டு 8 மணிநேரமாக அதிகரிக்கலாம்: அமைச்சர் எச்சரிக்கை

நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி, ஒக்டோபர் 15ஆம் திகதி வரை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மட்டுமே போதுமானது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிலக்கரி கிடைக்காவிட்டால் தினமும் 08 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார்.