கணவர் மீது அமிலத் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த பெண் உட்பட மூவர் கைது

#SriLanka #Murder #Arrest
Prasu
2 years ago
கணவர் மீது அமிலத் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த பெண் உட்பட மூவர் கைது

கணவர் மீது அமிலத் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண் உட்பட 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அகலவத்தை, கெகுலந்தல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக குறித்த நபர் அமிலத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண் சட்டத்தரணி என மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட பெண் 38 வயதுடையவர் எனவும் கைது செய்யப்பட்டவர்களில் அவரது 64 வயது சிறிய தந்தை மற்றும் 36 வயது சகோதரரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சகோதரி சந்தேகநபர்களுக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், தனது கணவர் தனக்குத்தானே அமிலத்தை ஊற்றிக் கொண்டதாக சந்தேகத்திற்குரிய சட்டத்தரணி பெண் தெரிவித்துள்ளார்.

அமிலத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் அநுராதபுரம் பிரதேசத்தில் பணிபுரிபவர் எனவும், சில காலமாக வெளிநாட்டில் இருந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மத்துகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.