இலங்கையில் இவ்வார இறுதியில் 1 மணித்தியாலம் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது - இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

Kanimoli
2 years ago
இலங்கையில் இவ்வார இறுதியில் 1 மணித்தியாலம் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது - இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

இலங்கையில் இவ்வார இறுதியில் 1 மணித்தியாலம் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறிப்பாக, இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வார இறுதி நாட்களில் (17,18) ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.