கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளது
Prathees
2 years ago
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் 23வது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியின் இரண்டாவது நாள் இன்று ஆகும்.
முதல் நாளில் வாசகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்ததால், கண்காட்சியை பொதுமக்கள் பார்வைக்காக இன்று முதல் இரவு 08 மணி வரை நீட்டிக்க ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்தா இந்திவேர இதனைத் தெரிவித்தார்.