சீதுவ விஹாராதிபதி கொலை: உண்டியலில் துபாய்க்குஅனுப்பப்பட்ட பணம்! பொலிஸார் தீவிர விசாரணை

Prathees
3 years ago
சீதுவ விஹாராதிபதி கொலை: உண்டியலில் துபாய்க்குஅனுப்பப்பட்ட பணம்! பொலிஸார் தீவிர விசாரணை

சீதுவ வெட்டேவ நந்தாராம விகாரையின் மெதகமுவ,  மகாநாம தேரரின் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் டுபாயில் வசிக்கும் முஸ்லிம் ஒருவரையும், 23 வயதுடைய யுவதியையும் கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

துபாயில் உள்ள 23 வயதுடைய யுவதி விஹாராதிபதி தேரரின் கொலைச் சம்பவத்தில் பிரதான சந்தேகநபர் என கூறப்படும் 19 வயதுடைய இளம் தேரரின் காதலி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விஹாராதிபதி தேரரின் கொலையின் மூலம் பெறப்பட்ட டிபெண்டர் ஜீப் மற்றும் வேகன்ஆர் விற்பனையில் இரண்டு கோடி ரூபா பெறப்பட்டுள்ளது.

குறித்த பணம் துபாயில்  உள்ள 23 வயதுடைய இளம்பெண் மற்றும் முஸ்லிம் ஒருவருக்கு உண்டியல் அனுப்பப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த யுவதிக்கு 19 வயதான இளம் தேரர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

இளம் தேரரும்  23 வயதுடைய யுவதியும் இதுவரை ஒருவரையொருவர் சந்தித்ததே இல்லை, இணையம் மூலம் தங்கள் காதல் உறவைப் பேணி வந்துள்ளனர்.

விஹாராதிப தேரர் மற்றும் மேற்படி உரிமையாளர்களின் சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும்இளம் தேரர்  தனது காதலியிடம் கூறியுள்ளார்.

23 வயதுடைய குறித்த யுவதி மினுவாங்கொட ஹீனாட்டியான பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் அவர் அண்மையில் துபாய்க்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

துபாயில் வசிக்கும் முஸ்லீம் ஒருவரின் கீழ் அவர் பணிபுரிந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விஹாராதிபதி தேரரின் சொத்துக்கள் குறித்து அந்த யுவதி தனது எஜமானரான முஸ்லிமிடம் கூறினார்.

பின்னர்இ இருவரும் விஹாராதிபதி தேரரைக் கொன்று சொத்தைப் பெற திட்டமிட்டனர்.

23 வயதுடைய சிறுமி தனது பெற்றோரை கொலைக்காக விஹாரைக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்.

கொலை செய்து சொத்துக்களைக் கைப்பற்றியவுடன் இளம் தேரரையும் துபாய்க்கு அழைக்க குறித்த 23 வயதான பெண் ஏற்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனால் இளம் தேரர்  துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட விஹாராதிப தேரர் பல்வேறு தொழில்களை செய்து பணம் சம்பாதித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

விஹாராதிபதி தேரருக்கும் சந்தேகத்திற்குரிய இளம்தேரருக்கும்  இடையில் சொத்து தொடர்பில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விஹாராதிபதி தேரரைக் கொன்றதாகக் கூறப்படும் துபாய் யுவதியின் பெற்றோர்கள் தற்போது காணாமல் போயுள்ளதோடு, அவர்களைக் கண்டுபிடிக்க 3 விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

சந்தேகத்திற்கு இடமான தம்பதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அவர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் விமான நிலையத்திற்கு வழங்க பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்துவின் ஆலோசனைக்கமைய நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சமன் சிகேரா மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா ஆகியோரின் பூரண மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4