திருகோணமலையைச் சேர்ந்த நபர் ஒருவர் வெட்டிக் கொலை

Prathees
2 years ago
திருகோணமலையைச் சேர்ந்த நபர் ஒருவர் வெட்டிக் கொலை

திருகோணமலை - கண்டி வீதி பெதிஸ்புர பிரதேசத்தில்  தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

விடியற்காலையில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.