களனியில் நடந்த கொலைக்கு உதவிய இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

Prathees
2 years ago
களனியில் நடந்த கொலைக்கு உதவிய இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுடன் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியான 21 கிராம் 121 மில்லிகிராம் ஹெரோயின், ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் அடங்கிய மகசீன் மற்றும் 9 மி.மீ ரக துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 3 கையடக்க தொலைபேசிகள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த செப்டெம்பர் 14ஆம் திகதி களனி, பட்டிய ஹந்தித பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆண்கள் இருவரும் வெல்லம்பிட்டிய மற்றும் கொழும்பு-மோதர உயன  15 பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 34 வயதுடையவர்களாவர்.

ஏனையவர்கள் கொழும்பு 15-மோதர உயன  பிரதேசத்தில் வசிக்கும் 35 மற்றும் 46 வயதுடைய இரு பெண்களாவர்.

மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.