ஆன்மிககுரு அருட்திரு அம்மாவின் 54 வது திருமணநாளை முன்னிட்டு இலங்கையில் வாழ்வாதார உதவி!

Reha
2 years ago
ஆன்மிககுரு அருட்திரு அம்மாவின் 54 வது திருமணநாளை முன்னிட்டு இலங்கையில் வாழ்வாதார உதவி!

லண்டன் ஈஸ்ற்ஹாம் மன்றத்தின் நிதியனுசரணையோடு மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணிமையம் - சுவிஸ் ஏற்பாட்டில் கடந்தகால யுத்தத்தினால் கையை இழந்த கணவனும் இடுப்புக்குகீழ் இயங்காத மனைவியும் தம்பிள்ளைகளோடு வாழ்வதற்கும் , கல்விகற்பித்து பிள்ளைகளை எதிர்காலத்தில் முன்னேற்றிடவும் கருத்திற்கொண்டு மிகப்பெரிய வாழ்வாதார உதவியாக கோழிக்கூடும் , 100 கோழிகளும் அதற்குரிய பாத்திரங்கள் மற்றும் தீவனங்களுடன் மனைவியின் உடல்உபாதைகளுக்குத் தேவையான பம்பஸ் போன்ற பொருட்களும் வழங்கப்பட்டது .     
  
இதனை சிறப்பாக செய்துகொடுத்த கிளிநொச்சிமாவட்ட ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் பொறுப்பாளர் சக்தி திருமதி கலைவாணியுடனான அறப்பணியாளர்களுக்கும் , இதனை ஆன்மிககுரு அருட்திரு அம்மாவின் 54 வது திருமணநாளை முன்னிட்டு 04.09.2022 அன்று நிதியனுசரணைமூலம் வழங்கிவைத்த லண்டன் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாடு ஈஸ்ற்ஹாம் வாரழிபாட்டு மன்ற சக்திகளுக்கு் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்வடைகிறோம் . ஓம் சக்தி! ஆதிபராசக்தி!! அனைவருக்கும் அம்மாவின் ஆசீர்வாதங்கள் கிடைத்து சிறப்புறவாழ்ந்திட அம்மாவின் அருளாசியை வேண்டிக்கொள்கிறோம்.  

அன்புடன் : சக்தி சுவிஸ் சுரேஷ் (நிறுவுனர் .ஆ.அ.மையம் -சுவிஸ்)