திருகோணமலை மாநகரசபைக்குட்பட்ட மலசல கூடத்தின் அவலம்.

Reha
2 years ago
திருகோணமலை மாநகரசபைக்குட்பட்ட மலசல கூடத்தின் அவலம்.

திருகோணமலை பிரதான பேரூந்து நிலையத்தில் இருக்கும் மலசல கழிவுகூடத்தில் வெளியே இருந்து அதனை துப்பரவு செய்வதற்க்கு கட்டணம் அறவிடப்பட்டபோதிலும் உள்ளே இருக்கும் மலம் மற்றும் சலம் கழிக்கும் இடங்கள் மாதக்கணக்கில் துப்பரவு செய்யாமல் சுகாதாரத்துக்கு கேடாக காணப்படுகிறது. இந்தநிலையில் மலசலம் கழிக்கும் அனைவருக்கும் பாரதூரமான சுகயீனங்கள் ஏற்படும் என்பது நிச்சயம். 

இந்த செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து பொதுநலத்தையும் சுகாதாரத்தையும் பேண உதவவும். அத்தோடு lanka4.com ஊடகத்தின் தன்மையை உண்ர்த்தும் முகமாக எமது ஊடகம் மக்களின் ஊடகம், பொறுப்போடு இயங்குவதாலும் ஊடக தர்மத்தை எந்த ஊடக வியாபாரிகளுக்கும் தலை சாய்க்காமலும் செய்திகளின் தலைப்புக்கு ஏற்றவாறு செய்திகளை உண்மைத் தன்மையின் உயிர் காயாமல் உலகத்துக்கு கொண்டுவருவதை இட்டு பெருமை அடைகிறது.  

இச்செய்தியை எமது lanka4.com திருகோணமலை ஊடகவியலாளர் சுரேஸ் ஊடாகப் பிரசுரிக்கப்படுகிறது.