தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான யோசனை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று!

Reha
2 years ago
தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான யோசனை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று!

தேசிய பேரவையை ஸ்தாபிப்பதற்கான யோசனை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

ஆளும் கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

இந்த யோசனை இன்றைய தினம் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய அமர்வின் போது, ஒரு மணிநேரம், வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக ஒதுக்கப்படவுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நிலைமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் நாடாளுமன்றை பார்வையிட இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் கடந்த 14ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.