அடுத்த மாதம் 10 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுமா? - இன்று முடிவெடுக்க கடைசி நாள்

Prathees
1 year ago
அடுத்த மாதம் 10 மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுமா? - இன்று முடிவெடுக்க கடைசி நாள்

நிலக்கரியை விரைவில் இறக்குமதி செய்யாவிட்டால், அடுத்த மாதம் முதல் 8 மணி முதல் 10 மணி நேரம் வரை தினசரி மின்வெட்டு நீட்டிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது. 

இதனை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன்படி, நிலக்கரி கையிருப்பு இறக்குமதிக்கான உத்தரவை செயல்படுத்த இன்றே கடைசி நாளாகும் vd அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்

இல்லாவிடில் எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்   குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்று முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை தினமும் இரண்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனால் தற்போதைய மின்வெட்டு மேலும் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பழைய லக்ஷபான அனல்மின் நிலையத்தின் 1ம் கட்டம் செயற்படவில்லை எனவும், மேற்கு கரையோர அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்தேவை திடீரென அதிகரித்தமையினால் மின்வெட்டு காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு எதிராக மதத் தலைவர்கள் மற்றும் ஏனைய தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், மின்வெட்டு நீடிப்பு தொடர்பான விவாதங்கள் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளன.