சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 12 பேர் கைது

Kanimoli
1 year ago
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 12 பேர்  கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கடல் வழிகளில் இருந்து வெளிவரும் சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக இலங்கை கடற்படையானது தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளையும் ரோந்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதன் போது சந்தேக நபர்கள் ஒலுத்துவாய் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 02 ஆண்களும் 03 பெண்களும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் 07 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.