இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவியாக மருந்துகளை வழங்கிய சீனா
Kanimoli
1 year ago
சீனாவின் 500 மில்லியன் RMB பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியின் கீழ், இலங்கை மக்களுக்கு மருந்துகளை சீனா வழங்கியுள்ளது.
அதன்படி இலங்கைக்கு நன்கொடையாக 12.5 மில்லியன் RMB (ரூ. 650 மில்லியன்) பெறுமதியான மருந்துப் பொருட்களை வழங்கவுள்ளது.
குறித்த மருந்துப்பொருகளுடன் ஏற்றிய விமானம் இன்று மாலை கொழும்பை வந்தடையும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.