அதிவேக நெடுஞ்சாலையில் பின் சக்கரங்கள் இன்றி பயணித்த பயணிகள் பேருந்து

Prathees
1 year ago
அதிவேக நெடுஞ்சாலையில்  பின் சக்கரங்கள் இன்றி பயணித்த பயணிகள் பேருந்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பயணிகள் பேருந்தின் பின் சக்கரங்கள் இரண்டும் கழன்று விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் தொடங்கொட மற்றும் வெலிபன்ன நுழைவாயில்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கதிர்காமத்தில் இருந்து கொட்டாவ பகுதிக்கு அதிகளவான வாகனங்களுடன் பஸ் பயணித்துள்ளது.

பேருந்தின் இரண்டு சக்கரங்கள் கழன்று விழுந்த பிறகும் சுமார் அரை கிலோமீற்றர் தூரம் முன்னோக்கி இழுத்துச் சென்று நின்றது.

இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை மற்றும் நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது.