குருநாகல் வர்த்தகர் கொலை: கொலைக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது

Prathees
1 year ago
 குருநாகல் வர்த்தகர் கொலை:  கொலைக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது

குருநாகல் நகரில் புத்தளம் வீதியில் வர்த்தக ஸ்தலமொன்றை நடத்தி வந்த உரிமையாளர் ஒருவர் கடந்த 28ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் தனது வியாபார இடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

குருநாகல் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் டொக்டர் அஜித் ஜயசேன, வியாபாரியின் கழுத்தை மொட்டையான ஆயுதத்தால் நெரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கொலையாளிகளை கைது செய்வதற்காக இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குருநாகல் தலைமையக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மர்மமான முறையில் இறந்த தொழிலதிபரின் கழுத்தில் ஐந்து பவுன் தங்கச் சங்கிலி இருந்ததாகவும், அவர் வைத்திருந்த பணத்தை திருடுவதற்காக போதைக்கு அடிமையானவர்கள் தொழிலதிபரை கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வெல்லவ உடுகம பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான சமன் ரோஹித என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.