மிக வேகமாக அபிவிருத்தியடைந்த பொருளாதாரமும் சமூகமும் போராட்டக்காரர்களால் நாசமாக்கப்பட்டுள்ளது - பிரசன்ன ரணதுங்க

Prasu
1 year ago
மிக வேகமாக அபிவிருத்தியடைந்த பொருளாதாரமும் சமூகமும் போராட்டக்காரர்களால் நாசமாக்கப்பட்டுள்ளது - பிரசன்ன ரணதுங்க

மிக வேகமாக அபிவிருத்தியடைந்து கொண்டிருந்த நாட்டின் பொருளாதாரமும் சமூகமும் போராட்டக்காரர்களால் நாசமாக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் வெற்றிகரமான வேலைத்திட்டத்தை அழித்த போராட்டக்காரர்களே இந்த பொருளாதார அழிவுக்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த அரசாங்கத்தின்போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து திட்டங்களும் கொரோனா மற்றும் ரஷ்யா-உக்ரைன் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.