பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் தொடருந்துடன் மோதி இளைஞரொருவர் பலி

Kanimoli
1 year ago
பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் தொடருந்துடன் மோதி இளைஞரொருவர் பலி

பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் தொடருந்துடன் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

காலி - ரத்கம காவல் பிரிவுக்குட்பட்ட விஜயரத்ன மாவத்தைப் பகுதியில் இன்று (04.10.2022) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலியில் இருந்து அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதுண்ட இளைஞர் பலத்த காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கம்மத்தேகொட - ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ரத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.