லண்டன் மராத்தான் போட்டியின் போது உயிரிழந்த 36 வயதான நபர்

Prasu
1 year ago
லண்டன் மராத்தான் போட்டியின் போது உயிரிழந்த 36 வயதான நபர்

லண்டன் மாரத்தான் போட்டியின் முடிவில் 36 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மைல் 23 மற்றும் 24 க்கு இடையில் அவருக்கு உடனடி சிகிச்சை கிடைத்ததாகவும், மூன்று நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்ததாகவும், ஆனால் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அந்த நபர் தென்கிழக்கு இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்றும் குடும்பத்தினர் தனியுரிமையைக் கேட்டுள்ளதாக காரணமாக மேலதிக விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்திற்கான காரணம் பின்னர் கண்டறியப்படும்.

லண்டன் மாரத்தான் அமைப்பில் ஈடுபட்டுள்ள அனைவர் சார்பிலும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் 40,000க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் போட்டியிட்டனர்.

ஆண்களுக்கான பந்தயத்தில் கென்யாவைச் சேர்ந்த அமோஸ் கிப்ருடோ 2:04:39 வினாடிகளில் தூரத்தை கடந்து வெற்றி பெற்றார்.

அதே நேரத்தில் பெண்கள் பிரிவில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த யாலெம்செர்ஃப் யெஹுவாலாவ் 2:17.25 வினாடிகளில் கடந்து வெற்றிபெற்றுள்ளார்.