டுவிட்டர் ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கும் எலான் மஸ்க் தீர்மானம்

Prasu
1 year ago
டுவிட்டர் ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கும் எலான் மஸ்க் தீர்மானம்

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அறிவித்தார். 

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் போலி கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்காததால் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் திடீரென்று அறிவித்தார். 

இதனால் டுவிட்டர் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் டுவிட்டரின் ஒரு பங்கிற்கு 54.20 டாலருக்கு ஒப்பந்தத்தை தொடர முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.