காலை உணவு விஷமானதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆரம்பக்கல்வி மாணவர்கள்

Prathees
1 year ago
காலை உணவு விஷமானதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆரம்பக்கல்வி மாணவர்கள்

வெல்லவாய கல்வி வலயத்திற்குட்பட்ட பல்வத்தை ஆரம்ப பாடசாலையின் 5ஆம் தர மாணவர்களுக்காக வழங்கப்பட்ட காலை உணவை நேற்று (05ஆம் திகதி) உண்ட பின்னர் திடீரென சுகவீனமடைந்த மாணவர்கs; வெல்லவாய அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

காலை உணவை உட்கொண்ட 17 மாணவர்கள் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் உள்ள குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை, சம்பவம் குறித்து விசாரணைகள் தொடரும் v வெல்லவாய ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அனுராத ரணதேவ தெரிவித்தார்.