மின்னல் தாக்குதலிற்கு இலக்காகி பெண் ஒருவர் பலி
Kanimoli
1 year ago
வவுனியா - மாமடுப்பகுதியில் மின்னல் தாக்குதலிற்கு இலக்காகி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த பெண் இன்று (7) மாலை வீட்டிலிருந்து தாமரை இலை பறிப்பதற்காக குளத்து பகுதிக்கு சென்ற நிலையில் மின்னல் தாக்குதலிற்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.
பெண் ஒருவரின் சடலம் ஒன்று இருப்பதை அவாதனித்த சிலர் சம்பவம் தொடர்பாக மாமடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் அட்டமஸ்கட பகுதியை சேர்ந்த சந்திரலதா வயது 49 என்ற பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.