இருபது நாட்களில் 72.3 மில்லியனுக்கும் அதிகமான வருமானம்

Mayoorikka
1 year ago
இருபது நாட்களில் 72.3 மில்லியனுக்கும் அதிகமான வருமானம்

செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் கடந்த இருபது நாட்களாக தாமரை கோபுர முகாமைத்துவம் 72.3 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

தாமரை கோபுரத்தில் இருந்து பங்கீ ஜம்பிங் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பயணச்சீட்டுகள், நிகழ்வுகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் மூலம் வருமானம் பெறுவதாக தெரிவித்தார்.


இதுவரை 127,300 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.