அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருளுடன் பிரதான முகவர் கைது

Mayoorikka
1 year ago
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருளுடன் பிரதான முகவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கல்முனை மதிரஸா வீதியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதானவர் கல்முனைகுடி பகுதியை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் 7 கிராம் உட்பட சந்தேக நபர் பாவித்த கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேக நபர் இப்பிராந்தியத்தில் போதைப்பொருள் பிரதான முகவராக செயற்பட்டு வந்துள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.