வீட்டை புதுப்பிக்கும் போது கிடைத்த புதையல் - ஒரே நாளில் தலைகீழாக மாறிய வாழ்க்கை

Prasu
1 year ago
வீட்டை புதுப்பிக்கும் போது கிடைத்த புதையல் - ஒரே நாளில் தலைகீழாக மாறிய வாழ்க்கை

பிரிட்டன் நாட்டில் கிழக்கு Ellerby என்ற இடத்தில் ஒரு தம்பதியர் வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். அந்த வீட்டை அவர்கள் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அந்த சமயத்தில் சமையலறையில் மண்ணுக்கடியிலிருந்து ஏதோ மின்னுவது போல் அவர்களுக்கு தெரிந்துள்ளது. இதனைக் கண்டு அவர்கள் ஏதாவது மின்சார ஒயராக இருக்கலாம் என்று முதலில் நினைத்துள்ளனர். பின்னர் அவர்கள் அதனை கவனமாக பார்த்தபோது தான் தங்க நாணயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனைக் கண்டு அவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் அந்த பாத்திரத்தில் 260 தங்க நாணயங்கள் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அவற்றின் மதிப்பு மொத்தம் 200000 முதல் 250000 பவுண்டுகள் இருக்கலாம் என முதலில் அந்த தம்பதியினர் கணக்கிட்டு உள்ளனர். ஆனால் புதையல் குறித்து அறிந்த ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், அமெரிக்க நாட்டவர்கள் அந்த நாணயங்களை ஏலத்தில் எடுக்க விரும்பியுள்ளனர்.

இதனால் அவற்றின் மதிப்பு தற்போது 754 பவுண்டுகளுக்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நாணயங்களை ஏலம் விட்ட நிறுவனம் கூறியதாவது “இந்த புதையல் தான் பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழமையான புதையல்” என்று கூறியுள்ளது. 

இதற்கிடையில் புதையலுக்கு சொந்தக்காரர்களான அந்த அதிர்ஷ்டக்கார தம்பதிகள் தற்போது கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.