எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவது தேசிய குற்றம் - ஜே.வி.பி

Prathees
1 year ago
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவது தேசிய குற்றம் - ஜே.வி.பி

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவது தேசிய குற்றமாகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இது இலங்கைக்கு செல்வ வளமாக இருப்பதால், இதனை மூடும் தீர்மானத்தின் ஊடாக எதிர்காலத்தில் இலங்கை மேலும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என மக்கள் விடுதலை பெரமுனவின் விளம்பர செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கச்சா எண்ணெய்க்கான அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தை இவ்வாறு மூட தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.