ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Mayoorikka
1 year ago
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஊடாக, தேவையான சந்தர்ப்பங்களில் விசாரணைகளுக்காக கைது செய்ய சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்..