இந்தியாவில் தன்னை கடித்த பாம்பை கடித்துக்கொன்ற 12 வயது சிறுவன்!

Nila
1 year ago
இந்தியாவில் தன்னை கடித்த பாம்பை கடித்துக்கொன்ற 12 வயது சிறுவன்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஸ்பூர் மாவட்டத்தில் பாஹ்டி கோர்வா என்ற பழங்குடியின கிராமம் உள்ளது.இப்பகுதியில் 200 வகையான பாம்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த 12 வயதான சிறுவன் தீபக்ராம் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று அங்கே விளையாடிக் கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று தீபக்ராம் கையை கடித்துள்ளது.

இதனால் வேதனையடைந்த சிறுவன் கையை உதறினான். ஆனாலும் பாம்பு விடாமல் கையை சுற்றியதால் ஆவேசம் அடைந்த சிறுவன் அந்த பாம்பை பலமுறை திரும்ப கடித்துள்ளான். இதில் அந்த பாம்பு உயிரிழந்தது.

சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து சிறுவனை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர் அங்கு சிறுவனுக்கு விஷ முறிவு மருந்துகள் செலுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிறுவன் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.