ராஜீவ் காந்தி கொலை! விடுவிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள்- தமிழக அதிகாரிகள்

Kanimoli
1 year ago
ராஜீவ் காந்தி கொலை! விடுவிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள்- தமிழக அதிகாரிகள்

இந்திய மத்திய அரசின் உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 4 இலங்கையர்களும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர் என்று தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளது.
விடுவிக்கப்பட்ட பின்னர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமுக்கு சனிக்கிழமை மாலை அழைத்துச் செல்லப்பட்டதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்தார்.
ஏற்கனவே இவர்கள் தொடர்பில் இலங்கை தூதரகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக அரசு சர்ச்சைக்குரிய வகையில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் பரிந்துரைத்த நிலையில், 2022 நவம்பர் 11ஆம் திகதி அவர்களை விடுதலை செய்ய இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரில் முதல்வாரன பேரறிவாளனை உடல்நிலை சரியில்லை மற்றும் நல்ல நடத்தை காரணமாக கடந்த  மே 18ஆம் திகதி இந்திய உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நிலையில் சில மாதங்களுக்குப் பிறகு ஏனைய பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பேரறிவாளன், நளினி ஸ்ரீஹரன், முருகன் என்ற ஸ்ரீஹரன், சாந்தன், பி ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ் மற்றும் எஸ் ஜெயக்குமார் ஆகிய ஏழு குற்றவாளிகள் 1991 இல் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் நளினியின் கணவர் ஸ்ரீஹரன் உட்பட நான்கு பேர் இலங்கையர்களாவர்.
இந்த நால்வரில், சாந்தன் மட்டுமே இலங்கைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள நளினியின் கணவர் ஸ்ரீஹரனும், லண்டனில் தங்கள் மகளுடன் இருக்க விரும்புவதாகவும், பயஸ் தனது குடும்பத்திற்குச் செல்ல விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரொபர்ட் பயஷ் நெதர்லாந்து செல்ல விருப்பம் வெளியிட்ட நிலையில் ஜெயக்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகள் வசிக்கும் சென்னையில் தங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
எனினும்  விடுதலை செய்யப்பட்ட நான்கு இலங்கை பிரஜைகள் எங்கு செல்ல விரும்பினர் என்பது குறித்து தமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என திருச்சி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு ஏதேனும் இட ஒதுக்கீடு இருந்தால், அவர்கள் அதை எழுத்துப்பூர்வமாக தந்தால், அதை தாம் மாநில அரசுக்கு அனுப்பமுடியும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.
இதேவேளை விடுதலை பெற்றவர்கள், இலங்கைக்கு செல்ல விரும்பவில்லை என்றால், அவர்கள் அகதிகள் என்று கூறி, சர்வதேச மனித உரிமைகள், அகதிகள், மனிதாபிமான மற்றும் மரபுச் சட்டங்களின் கீழ் 'மீண்டும் திரும்பப் பெறாத கொள்கையின்' அடிப்படையில் இந்தியாவிலேயே தங்குவதற்கு அனுமதிக் கோரலாம் என்று சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லவேண்டுமானால், அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டிய அவசியமில்லை. . இந்திய அரசாங்கம் அவர்களுக்கு வெளியேறும் அனுமதியை வழங்க முடியும், ஆனால் அவர்கள் கடுமையான குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதால், அது நடக்குமா என்பதை கூறமுடியாது என்றும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.