அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பணவீக்கம் படிப்படியாக குறையலாம்: மத்திய வங்கி நம்பிக்கை
Mayoorikka
1 year ago
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பணவீக்கம் படிப்படியாக குறையலாம் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது. உள்ளுர் விநியோக நிலைமைகளில் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் மற்றும் உலகளாவிய பொருட்களின் விலை வீழ்ச்சி என்பன இதற்கான காரணங்களாகும் என மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி பிரதிப் பணிப்பாளர் கலாநிதி எல்ஆர்சி பட்பெரிய தெரிவித்தார்.
வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு மற்றும் சுற்றுலா வரவுகள் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த பணவீக்கம் கடந்த மாதம் சற்று குறைவடைந்துள்ளது. அதன்படி, செப்டம்பரில் பணவீக்கம் 70 சதவீதமாகவும் 6 தசமங்களாகவும் காட்டப்பட்டது.