அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த இலங்கை தமிழ் அகதியொருவர் இன்று நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்
Kanimoli
1 year ago
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த இலங்கை தமிழ் அகதியொருவர் இன்று நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனோநிலை பாதிக்கப்பட்டதால் எம்ஐடீஏ சிறையில் ஐந்து வருடங்கள் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே இவ்வாறு நாட்டுக்கு வரவுள்ளார்.
குறித்த நபர் இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்காக மெல்பேர்ன் விமானநிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இலங்கைதமிழர் பலவந்தமாக நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.