உலகின் மிகப்பெரிய உருளை வடிவ மீன்தொட்டி வெடித்து சிதறியதால் அதிகாரிகள் அதிர்ச்சி

உலகின் மிகப்பெரிய உருளை வடிவ மீன்தொட்டி வெடித்து சிதறியதால் அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லினின் மிட்டே மாவட்டத்தில் வணிகவளாகம் ஒன்றில் ஹொட்டல் மற்றும் மீன் கண்காட்சியும் உள்ளது.
குறித்த அக்வேரியத்தில் 1500 மீன்கள் வளர்க்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இந்த உருளை அக்வேரியம் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.
உடனே தாமதிக்காமல் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் அப்பகுதியை கொண்டுவந்ததோடு, ஹொட்டலில் வசித்த மக்களை வேறு பகுதிக்கு மாற்றியுள்ளனர். மேலும் உடைந்த கண்ணாடி பொருட்களையும் அப்புறப்படுத்தியுள்ளனர்.
குறித்த மீன் காட்சி தொட்டி உருளை உலகின் மிகப்பெரியது என்றும், அத்தருணத்தில் ஒரு நிலநடுக்கம் போன்று இருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.



