இறக்குமதி வரியை குறைக்குமாறு கோரிக்கை - ட்ரம்பிற்கு அனுப்பட்ட கடிதம்!
இலங்கை மீதான இறக்குமதி வரிகளை தற்போதை மட்டத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்குமாறு வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில், தித்வா சூறாவளி தாக்கத்தின் போது தகுந்த நேரத்தில் அமெரிக்கா வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டிற்கும் மக்களுக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்பட்ட பேரழிவைக் கருத்தில் கொண்டு, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான தற்போதைய வரி விகிதத்தைக் குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கம் கட்டண விகிதத்தைக் குறைக்க ஒப்புக்கொண்டால், அத்தகைய நிவாரணத்தின் வருடாந்திர நிதி மதிப்பு, சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு வழங்கும் ஒரு தவணை நிதியின் மதிப்பை விட அதிகமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மிகப்பெரிய சவாலைத் தொடர்ந்து மீண்டும் தனது காலில் உறுதியாக நிற்க பாடுபடும் நிலையில், அத்தகைய கருணை மற்றும் ஒற்றுமையின் செயல் அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.