தயிரானது பாலைவிட அதிக சிறப்புத்தன்மை வாய்ந்தது ஏன் தெரியுமா?

#Health #Milk Powder
தயிரானது பாலைவிட அதிக சிறப்புத்தன்மை வாய்ந்தது ஏன் தெரியுமா?

தயிரானது பாலை விட சிறப்பானது ஏன் என்ற விஞ்ஞான ரீதியிலான விளக்கத்தை இப்போது பார்ப்போம்

தயிரில் காணப்படும் புரதம் பாலில் உள்ளதை விட விரைவில் சமிபாடடைந்து விடும். மற்றும் அதிலிருந்து அதிக சக்தியையும் பெற்றுக்கொள்ளலாம்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில், 32 சதவீதம் பால்தான் சமிபாடாகும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில்91 சதவீதம் சமிபாட்டாக்கபட்டுவிடும். பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

தயிரில் இருக்கும் பாக்டீரியா சமிபாட்டு வீதத்தை அதிகரித்து, நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. எனவே தான் வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். மன அழுத்தம், சோர்வை உண்டாக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரத்தலை தயிர் கட்டுப்படுத்துகிறது.

தயிரில் வைட்டமின் பி-12, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் தாது உப்புகள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளாகும்.

தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதியம். இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம். 

தயிருடன் தேன் ஏன் சேர்த்து சாப்பிடுகிறார்கள் தெரியுமா?, இதனால் வாய்ப்புண், பல் வலி குணமாகும். காரணம், இதில் ஆன்டிபாக்டீரியல் தன்மைகள் ஏராளமான அளவில் உள்ளன.

இது சிறுநீரக பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும். தயிருடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோபயோடிக் பாக்டீரியாக்கள், பெப்ரைன் ஆகியவை மலச்சிக்கல் மற்றும்  இதில்  உள்ள வைட்டமின்-சியானது  முதுமையையும் தடுக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!