உக்ரேனில் போர்நிறுத்தம் செய்வதற்கான கிரெம்ளினின் ஒருதலைப்பட்ச அழைப்புகளை மேற்குலக நாடுகள் நிராகரிக்க வேண்டும் - ரிஷி சுனக்

Nila
3 years ago
உக்ரேனில் போர்நிறுத்தம் செய்வதற்கான கிரெம்ளினின் ஒருதலைப்பட்ச அழைப்புகளை மேற்குலக நாடுகள் நிராகரிக்க வேண்டும் - ரிஷி சுனக்

உக்ரேனில் போர்நிறுத்தம் செய்வதற்கான கிரெம்ளினின் ஒருதலைப்பட்ச அழைப்புகளை மேற்குலக நாடுகள் நிராகரிக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 

லாட்வியாவில் நடைபெற்ற ஐரோப்பிய தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவத்த அவர் இவ்வாறு கூறினார். 

போரிஸ் ஜான்சனின் கீழ் தொடங்கிய உக்ரைனுக்கான வலுவான ஆதரவை பிரிட்டன் தொடருமா என்ற கவலை அதிகமாக இருந்த நேரத்தில், பிரதமர் ரிஷி சுனக்கின் கருத்து வெளியாகியுள்ளது. 

ரஷ்யாவால் ஊக்குவிக்கப்பட்ட போர்நிறுத்தங்களை நிராகரிப்பது சில காலமாக மேற்கின் நிலைப்பாடாக இருந்து வருகிறது - ஆனால் உக்ரைனில் நடக்கும் போரில் மேற்கு நாடுகள் ஆர்வத்தை இழக்க நேரிடும். இதனால் போருக்கு தேவையான ஆயுதங்களை வழங்கும் செயற்பாடு மெதுவடையலாம் எனவும் ரிஷி சுனக் கூறியுள்ளார்

.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4