ஒரே ஒரு புகைப்படத்தை பதிவு செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்!

#Cinema #Director #TamilCinema #Lanka4
Reha
1 year ago
ஒரே ஒரு புகைப்படத்தை பதிவு செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்த பதிவு வைரலானது. தற்போது செல்வராகவன் ஒரே ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும். இந்த பதிவுக்கு என்ன அர்த்தம் என நெட்டிசன்கள் விவாதம் செய்துகொண்டு இருந்த நிலையில் அவர் தனது இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்யப் போகிறார் என்றும் வதந்திகள் பரவியது.

இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் செல்வராகவன் தனது மனைவி மற்றும் மகளின் புகைப்படத்தை பதிவு செய்து என்னுடைய வாழ்க்கையில் உள்ள இரண்டு பெண்கள் என்று பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவர் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக பரவிவரும் வதந்திகளும் புள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!