முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான், இதன் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?

#ஆரோக்கியம் #மூலிகை #பயன்பாடு #Health #herbs #Home #Benefits
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான், இதன் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்’! – என்று ஏன் சொல்கிறார்கள்?

பொதுவாக இந்த பழமொழிக்கு தவறான வகையில் அர்த்தம் புரிந்து கொண்டு பலர் எம் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகின்றோம். அதன் உண்மையான அர்த்தத்தை லங்கா4 உங்களுடன் சேர்ந்து நிற்கிறது.

முருங்கை மரத்தை நமது வீட்டில் வளர்த்தால் நமக்கு அதிலிருந்து பூ, காய், இலை மற்றும் பிசின் என அனைத்தும் பயன் தரக்கூடியவை ஆகும்.

முருங்கை இலை எமது உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள உதவக் கூடிய ஒரு மூலிகை ஆகும். இவற்றை தினமும் யார் யாரெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளுகின்றார்களோ அவர்கள் அனைவரும் முதுமையடைந்தாலும் ஊன்று கோலின் துணையின்றி; வெறுங்கையோடு நடந்து செல்ல முடியும் என்பது உறுதி.

இதைத்தான் நம் முன்னோர்கள் “முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்” என்று சொல்லி வைத்தார்கள். ஆகவே நீங்களும் வேறு விதமாக இதை எண்ணாது இன்றே இந்தப்பருவத்தில்  முருங்கையை நட்டு ஊன்று கோலின் துணையின்றி வெறுங்கையோடு நடக்க எதிர்பாருங்கள்.!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!