பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 26

#ஆன்மீகம் #கடவுள் #பிள்ளையார் #இன்று #தகவல் #spiritual #God #Pillaiyar #today #information
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள். பாகம் - 26
  1. முழுவிநாயகப்பெருமானின் வடிவம் சிருஷ்டி, திதி. சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெரும் கடமைகளின் அடையாளம் எனும் தத்துவத்தைக் காட்டும்.
     
  2. ஒருவர் பிள்ளையாருக்கு ஏன் அருகம்புல் சாத்துவது என்று கேட்கலாம். விஞ்ஞான ரீதியாக அருகம்புல்சாறு உடலின் அதிகப்படியான உப்பைக்கரைத்து வெளியேற்றி ரத்தத்தின சுத்திகரிக்கும். அதனால் தான் அந்த புல்லானது அவசியம் எனப்பட்டது.
     
  3. இதைத் தவிர எருக்கம் பூ மாலை, வன்னி மர இலை மாலையாலும் பிள்ளையாருக்கு மாலை சூட்டப்படும், இவைகளும் மருத்துவ குணம் மிகுந்ததே.
     
  4. பிள்ளையார் முன்னால் தோப்புகரணம் என்பது ஒரு யோகாசனம், காது என்பது முக்கியமான நரம்பு முடிச்சுகளை கொண்டது, அக்காலத்தில் காது குத்திய தத்துவம் அதனால்தான்.
     
  5. காதை பிடித்து இழுப்பது யோகத்தில் ஒருவகை ஆயிற்று, அதை பிள்ளையார் முன் செய்தால் நலம் பெருகும் என்ற தத்துவமே தோப்புகரண தத்துவம்.