35 போர் விமானங்களை வாங்க கனடா ஓப்பந்தமா ?!

#Canada
Prabha Praneetha
3 years ago
35 போர் விமானங்களை வாங்க கனடா ஓப்பந்தமா ?!

88 எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்காவுடன் ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுடன் கனடா தனது ஒரு ஒப்பந்தத்தை  உறுதி செய்துள்ளது.

குறித்த 19 பில்லியன் கனேடிய டொலர்கள் ஒப்பந்தம் 30 ஆண்டுகளில் றோயல் கனடிய விமானப்படையில் மிகப்பெரிய முதலீட்டைக் குறிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார் .

anitha aanandh

நாட்டின் வயதான கடற்படையை மேம்படுத்த முற்படும் கனேடிய அரசாங்கத்திற்கு முதல் நான்கு எஃப்-35 விமானங்கள் 2026இல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், கடற்படைக்கான முழு செயல்பாட்டுத் திறனுக்கான எஃப்-35 விமானங்கள் 2032 மற்றும் 2034ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வழங்கப்படும்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் அனிதா ஆனந்த்,
‘உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற ஆக்கிரமிப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் பெருகிய உறுதியான நடத்தை ஆகியவற்றுடன், நமது உலகம் இருண்டதாக வளர்ந்து வருவதால், இந்த திட்டம் உயர்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது’ என கூறினார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் மெக்ஸிகோ சிட்டியில் நடைபெறும் ‘த்ரீ அமிகோஸ்’ உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மெக்ஸிகோ ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோரை சந்திக்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4