தென்கொரியாவில் BTS இசைக்குழுவை சந்திக்க வீட்டை விட்டு ஓடிய பாகிஸ்தானிய சிறுமிகள்

#SouthKorea #Pakistan
Prasu
1 year ago
தென்கொரியாவில் BTS இசைக்குழுவை சந்திக்க வீட்டை விட்டு ஓடிய பாகிஸ்தானிய சிறுமிகள்

பாகிஸ்தானில் கடந்த வாரம் வீடுகளில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு இளம்பெண்கள் தென் கொரியாவுக்குச் செல்ல முயன்றபோது கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற K-pop சூப்பர் இசைக்குழு என அழைக்கப்படும் BTS-ஐ சந்திப்பதற்காக இந்த இரண்டு பாகிஸ்தானிய சிறுமிகளும் வீட்டை விட்டு ஓடியதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நேரத்தில், அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து 750 மைல்கள் பயணம் செய்தனர்.

13 மற்றும் 14 வயதுடைய இந்த இரண்டு சிறுமிகளும் சனிக்கிழமை கராச்சியின் கோரங்கி பகுதியில் இருந்து காணாமல் போனதாக அந்த பகுதியின் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் அப்ரைஸ் அலி அப்பாஸி வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

புகாரைத் தொடர்ந்து சிறுமிகளின் வீடுகளில் நடத்திய சோதனையில், BTS இசைக்குழுவைச் சந்திக்க அவர்கள் தென் கொரியாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த டைரியை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

“ரயில் அட்டவணைகள் குறிப்பிடப்பட்டிருப்பதை நாங்கள் டைரியில் பார்த்தோம், மேலும் அவர்கள் மற்றொரு நண்பருடன் தப்பி ஓட திட்டமிட்டுள்ளனர் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். பின்னர் லாகூர் பொலிஸார் அவர்களைக் கண்காணிக்க திட்டமிட்டபோது அவர்களை கைது செய்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது” என கராச்சி மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் அப்ரிஸ் அலி அப்பாசி குறிப்பிட்டார்.

சிறுமிகளை லாகூரில் இருந்து கராச்சிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!