உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகிய 65 வயதுடைய பெண் வெட்டி கொலை

#SriLanka #Election #Women #Murder
Prasu
1 year ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகிய 65 வயதுடைய பெண் வெட்டி கொலை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகியதாக கூறப்படும்  65 வயதுடைய பெண் ஒருவர்  மினுவாங்கொடையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மினுவாங்கொட யாகொடமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த பெண்  வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பெண் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வந்தமை பொலிஸாரின்  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!