சிங்கள சினிமாவின் கவிஞர் என்று அழைக்கப்படும் மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் சுமித்ரா பீரிஸ் காலமானார்

#SriLanka #Cinema #Director #Death
Prasu
3 years ago
சிங்கள சினிமாவின் கவிஞர் என்று அழைக்கப்படும் மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் சுமித்ரா பீரிஸ் காலமானார்

இலங்கையில் மூத்த திரைப்பட தயாரிப்பாளரான கலாநிதி சுமித்ரா பீரிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள சினிமாவின் கவிஞர் என்று அழைக்கப்படும் மூத்த திரைப்படத் தயாரிப்பாளரான சுமித்ரா பீரிஸ் இலங்கையின் முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

இவர் இலங்கை சினிமாவின் முன்னோடியான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவியும் ஆவார். கெஹெனு லமாய், கங்கா அத்தாரா, யஹலுவோ, மாயா, சக்மான் மாலுவா மற்றும் வைஷ்ணவி போன்ற கிளாசிக்கல் இலங்கை ஹிட்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

அவர் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4