உயர்தரம் கற்க பாடசாலைக்குள் நுழைந்த மாணவன் மீது தாக்குதல்: குரல்வளை வெடித்து சுயநினைவை இழந்த மாணவன்!

#Student #Attack #Police
Prathees
1 year ago
உயர்தரம் கற்க பாடசாலைக்குள்  நுழைந்த மாணவன் மீது தாக்குதல்:  குரல்வளை வெடித்து  சுயநினைவை இழந்த மாணவன்!

களுத்துறை பிரதான பாடசாலையொன்றில் உயர்தரம் கற்பதற்காக நுழைந்த புதிய மாணவர் ஒருவரை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய மூன்று மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட மூன்று மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை பிரதான ஆண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரப் பாடசாலையில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையின் உயர்தர வகுப்பிற்குள் நுழைந்த புதிய மாணவர் ஒருவர் துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும், அவர் சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவரின் குரல்வளை பகுதி வெடித்ததால் பல தையல்கள் போடப்பட்டதாகவும், 24 மணி நேரத்திற்கும் மேலாக அவர் சரியாக சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!