கொழும்பில் நாளை ஒன்பது மணிநேர நீர் வெட்டு

Prabha Praneetha
3 years ago
கொழும்பில் நாளை ஒன்பது மணிநேர நீர் வெட்டு

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும். (ஜனவரி 20) கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் அம்பத்தலேயில் உள்ள நீரேற்று நிலையத்தின் அத்தியாவசிய திருத்தம் காரணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே, கடுவெல, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த நகரசபைகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேகரிக்குமாறு NWSDB கேட்டுக் கொண்டுள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4